பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம்!

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம்!

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த சிம்பு, மூன்றாவது முறையாக நதிகளிலே நீராடும் சூரியன் என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதுகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.