வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது...

மலையாள நடிகை அம்பிலியை அவரது கணவர் ஆதித்யன் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது...

2004ஆம் ஆண்டில் வெளிவந்த விஸ்வத்துளசி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அம்பிலிதேவி. அந்த படத்தில் நந்திதா தாஸின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு மலையாள படங்கள், சீரியல்களில் நடித்து வந்தார்.

அம்பிலிதேவி கேமராமேன் லோவலை 2009ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அமர்நாத் என்ற மகனும் இருக்கிறார். 2014ஆம் ஆண்டில் விவாகரத்தும் செய்தார். பின்னர் சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

ஆதித்யன் ஏற்கனவே 3 முறை திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஆவதாக கல்யாணம் செய்து கொண்ட அம்பிலியோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்திருக்கிறார். அந்தப் பெண் தற்போது கர்ப்பமாகவும் இருக்கிறாராம். ஏற்கனவே அந்த பெண்ணுக்கு 13 வயதில் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது ஆதித்யன் மூலமாக கர்ப்பம் தரித்திருக்கிறார். அந்தப் பெண்ணின் கர்ப்பகால ஸ்கேன் ரிப்போர்ட்டை பேஸ்புக்கில் வெளியிடும் அளவிற்கு போய்விட்டார் ஆதித்யன்.

இந்நிலையில் அம்பிலி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கணவர் ஆதித்யன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மியூச்சுவல் விவாகரத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆதித்யன் கைது செய்ப்பட்டிருக்கிறார்.