அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம்... செல்வராகவன்

பிரபல இயக்குனர் செல்வராகவன் ”தனிமையே பேரின்பம் ” என தனிமை பற்றிய தன் கருத்துகளை முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம்... செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் செல்வராகவன். காதல் கொண்டேன் படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்.

தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதை, தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் என்னதான் சினி துறையில் பிஸியாக சுற்றி வந்தாலும், சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கருத்துக்களை பதிவு செய்து வருவதை ஒருபோதும் விடிவதில்லை. அந்த வகையில்,தற்போது தனிமை பற்றிய சில கருத்துகளை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.’ என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகிய இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.