’புஷ்பா 2’ வில் சமந்தா நடனம் ஆட போவதில்லையாம்...! அப்ப வேற யாரு?

’புஷ்பா 2’ படத்தில் சமந்தா நடனம் ஆட போவதில்லை...

’புஷ்பா 2’ வில் சமந்தா நடனம் ஆட போவதில்லையாம்...! அப்ப வேற யாரு?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான  ’புஷ்பா’ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மாபெரும் வசூலை குவித்தது. இப்படத்தின் ரீச்சுக்கு மிகப்பெரிய காரணம் ‘புஷ்பா’வில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற உள்ளதாகவும், ஆனால் இந்த பாடலில் சமந்தா நடனம் ஆட போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ’புஷ்பா’ படத்திலும் திஷா பதானிக்குத்தான் இந்த பாடலில் நடனம் ஆட வாய்ப்பு வந்தது என்பதும், ஆனால் திஷா ஆட மறுத்து விட்டதை அடுத்தே சமந்தா நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது பாகத்தில் நடனம் ஆட திஷா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் கூறுகின்றது.