சமந்தாவை உளவியல் ரீதியாக துன்புறுத்தினாரா நாக சைதன்யா? - சமந்தா ஒப்பனையாளரின் பதிவால் பரபரப்பு

நடிகர் நாக சைதன்யா,உளவியல் ரீதியாக துன்புறுத்தியதே சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவை உளவியல் ரீதியாக துன்புறுத்தினாரா நாக சைதன்யா? - சமந்தா ஒப்பனையாளரின் பதிவால் பரபரப்பு

நடிகர் நாக சைதன்யா,உளவியல் ரீதியாக துன்புறுத்தியதே சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்களது திருமண வாழ்வை முறித்துக் கொண்டுள்ள நிலையில், சமந்தாவின் ஒப்பனையாளரான பிரீதம் ஜுகல்கர், கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்  ’சிலர் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் உண்மை தன்மையை மறைப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அவர்களே பொறுப்பு’ என்றும் கூறியுள்ளார்.

வன்முறை என்பது உளவியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் விமர்சனத்தின் ஒரு வடிவம்’ என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அது நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து பற்றிய கருத்தாக இருக்கலாம் என்ற அடிப்படையில், நெட்டிசன்கள் கருதுகின்றனர்.