நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு... வெளியான தகவல் குறித்து விக்ரம் மேலாளர் கூறியது!

நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு... வெளியான தகவல் குறித்து விக்ரம் மேலாளர் கூறியது!

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நடிகர் விக்ரம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று விக்ரம் மேலாளர் ட்விட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “மஹான்”. அந்த படத்தில் விக்ரம் அவர் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 

இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. இதனிடையே நடிகர் விக்ரம் மாரடைப்பு ஏற்பட்டதால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விக்ரமின் மேனேஜர் சூர்யநாராயணன் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் அன்பான சியான் விக்ரம் அவர்கள் இப்போது நலமுடன் உள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல் வெறும் வதந்தி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.