ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்...நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்க பரிந்துரை!

ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்...நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்க பரிந்துரை!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் லோன் தருவதாக கூறி 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும், தற்போது வரை ஆஜராகாததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை நடிகர் ஆர்.கே சுரேஷ்.

இதையும் படிக்க : திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...யார் யார் எந்தெந்த தேதிகளில் உரையாற்றுகிறார்கள்?

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆர்.கே சுரேஷின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வில் சந்தேகப்படும் படியான டிரான்சாக்‌ஷன்கள் இருந்தால் அவரது வங்கிக் கணக்கை முடக்க பரிந்துரை செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.