அரசியலில் இருந்து விலகியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்!

அரசியலில் இருந்து விலகியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்!

கொரோனா 2-வது அலை தொடங்கிவிட்டதால் அரசியல் பணிகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், தான் அரசியலில் இருந்து விலகியது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்தார். 

இதையும் படிக்க : 6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி...ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

அப்போது, தான் அரசியல் பணியில் ஈடுபடும் போது கொரோனா 2-வது அலை தொடங்கி விட்டதால், அந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி செல்வதாக இருந்தால் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக தான் அறிவித்தேன் எனவும் அவர் கூறினார்.