ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.,! சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால் நடிக்கும் படம்.! 

ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.,! சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால் நடிக்கும் படம்.! 

பல ஆண்டுகளாக தென் இந்திய நடிகர் சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் ராதாரவியும்  அவரது நண்பர் சரத்குமாரும் தான். இவர்களை எதிர்த்து வெற்றிபெறுவது எல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில் புதிய இளைஞர் படையோடு களத்தில் குதித்த நடிகர் விஷால் பெரும் வெற்றியை ஈட்டினார்.

பாண்டவர் அணி என்ற பெயரில் தனி அணி அமைத்த அவர்,  நடிகர் சங்க கட்டிடம் கட்டுவோம், தமிழக நடிகர்களையும், தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று பல வாக்குறுதிகளை கொடுத்த அவரை வெற்றிபெற வைத்தார்கள் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், வெற்றிபெற்றதும் தான் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். 

நடிகர் சங்கத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா பரபரப்பாக நடந்தது. ஆனால், அது மட்டுமே நடந்தது தவிர, அதன் பின்னர் வேறு எதுவும் நடக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக தமிழக நடிகர்களை ஊக்குவிப்பேன் என்ற அவரது தேர்தல் வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் நடிக்கும் பெயரிடப்படாத படத்துக்கு தற்போது விஷால்32 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக நடிகர்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

நடிகர் சங்க வாக்குறுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தருவோம் என்று சொல்லிவிட்டு, இப்படி ஹைதராபாத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை தருவோம் என்று சொல்வது எந்த விதத்தில் சரியானது என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.