பொன்னியின் செல்வன் 2...! வெறிச்சோடிய தியேட்டர்கள்...!!

பொன்னியின் செல்வன் 2...!  வெறிச்சோடிய தியேட்டர்கள்...!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பார்க்க ரசிகர்கள் வராததால் திருச்சியில் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
 
இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில்  நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.Ponniyin Selvan 2 Release date: 'Ponniyin Selvan-2' to hit theatres on this  date, reveals distributor Udhayanidhi Stalin - The Economic Times

பெரும்பாலும் இதுபோன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை நேரத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அரசு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது.

திருச்சியில் உள்ள திரையரங்குகளில் இன்று படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இதுபபோன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு மேளதாளங்கள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் எவ்வித ஆரவாரம் இன்றி திருச்சியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெறுமா வரும் நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்குமா என்பது போகப் போகதான் தெரியும்.