வெளியானது வந்தியெத்தேவனின் தேடுதலை வெளிப்படுத்தும் பொன்னி நதி பாடல்:

ஏ ஆர் ரஹ்மான் இசையில், உருவாகியுள்ள இந்த பாடலானது, வெளியான சில மணித்துளிகளில் பல லைக்குகளையும் பார்வையாளர்களையும் பெற்றது.

வெளியானது வந்தியெத்தேவனின் தேடுதலை வெளிப்படுத்தும் பொன்னி நதி பாடல்:

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.   

மேலும் படிக்க: பிரம்மாண்டமாக வெளியானது பொன்னியின் செல்வன் -1 டீசர்...!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஜூலை 8 அன்று சென்னை டிரேட் சென்டரில் நடைப்பெற்று அதன் பிரம்மாண்ட டீசர் வெளியிடப்பட்டது.

வருகிற சேப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், யார் இந்த அருண்மொழி வர்மன்? என்ற குறிப்புகள் வெளியிட்டை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு, தற்போது, படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. இன்று மாலை 6 அணி அளவில் இந்த பாடலின் லிரிச் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

தூதுவன் வந்தியத்தேவனின் கடந்து வரும் பாதைகளை மிக அழகாக எடுத்துக் காட்டும் இந்த பாடலை, ஏ ஆர் ரஹ்மான், ஏ ஆர் ரையானா, பம்பா பாகியா ஆகியோர் பாடியுள்ளனர். இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், வந்தியத்தேவனின் வருகைப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.