சல்மான் கான் மட்டுமின்றி கரண் ஜோஹரையும் கொலை செய்ய திட்டம்.. அதிர்ச்சி தகவல்!!

சல்மான் கான் மட்டுமின்றி கரண் ஜோஹரையும் கொலை செய்ய திட்டம்.. அதிர்ச்சி தகவல்!!

சல்மான் கான் மட்டுமின்றி கரண் ஜோஹரையும் கொலை செய்ய பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டதில் மூளையாக செயல்பட்ட பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய். சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்” என்று சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்காக  லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் ராஜஸ்தானில் இருந்து மகாராஷ்டிரா சென்றதாகவும் தகவல் வெளியாகின. இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரையும் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.