அடடா..குஷ்பு-வின் கன்னத்தில் அறைந்தது யார்? என்ன ஆச்சு அவருக்கு.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

அடடா..குஷ்பு-வின் கன்னத்தில் அறைந்தது யார்?  என்ன ஆச்சு அவருக்கு.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாது சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார் குஷ்பூ. 

இவர் கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். சினிமா துறையில் மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ ஒரு தேசிய கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

என்னதான் நடிப்பு, அரசியல் என பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் வழக்கம்போல் இன்றும் குஷ்பு  போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கன்னத்தில் யாரோ அறைந்தது போன்ற அடையாளத்துடன் கூடிய போட்டோவில் "Say No To Violence" என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி ஆகி அடடா.. குஷ்பூவிற்கு என்ன ஆனது என கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த போட்டோவின் உண்மை என்னவென்றால் ”குஷ்பூ தற்போது மீரா என்ற ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறாராம். அந்த தொடரின் போட்டோ தான் அது. விரைவில் ஒளிபரப்பை தொடங்க இருக்கும் அந்த சீரியலின் கதையை கூட குஷ்பூ தான் எழுதி வருகிறாராம்” என்ற தகவல் வெளியாகியுள்ளது.