சென்னையின் ஆன்மாவை பிரதிபலிக்க வரும் “மாடர்ன் லவ் சென்னை”...!!

சென்னையின் ஆன்மாவை பிரதிபலிக்க வரும் “மாடர்ன் லவ் சென்னை”...!!

இந்திய சினிமாவின் ஆறு சிறந்த படைப்பாளிகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல் , ராஜுமுருகன் , கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோரை ஒன்றிணைத்து  “மாடர்ன் லவ் சென்னை” ஒரு ஆந்தாலஜி வெப் சீரியஸாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். 

உலகளாவிய ஈர்ப்பைக் கொண்ட காதல் கதை, தற்போது உள்நாட்டில் வேரூன்றி தனித்துவமான நிலப்பரப்புகள் மற்றும் பலதரப்பட்ட குடிமக்களைக் கொண்ட சென்னையின் ஆன்மாவை பிரதிபலிக்க இருக்கிறது.  பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும், பறவை கூட்டில் வாழும் மழை என்ற அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.  31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றும், இந்த பழம் பெரும் ஜோடிகளின் படைப்பை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்தத் தொடரின் முதல் அத்தியாயமான லாலகுண்டா பொம்மைகள் ராஜு முருகன் இயக்கத்திலும், ஷான் ரோல்டன்  இசையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதில்  ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி மற்றும் வசுந்தரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  அதனை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட  “இமைகள்” என்ற அத்தியாயத்தில்,  அசோக் செல்வன் மற்றும் டிஜே பானு நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும்  “காதல் என்பது கண்ணுல இதயம் இருக்குற எமோஜியை’’ கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார். இதற்கு  ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க,  ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மார்கழி படத்தை அக்ஷய் சுந்தர் இயக்க, இந்த அத்தியாயத்திலும் இளையராஜா இசையமைத்துள்ளார்.இதில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண தயாள் ஆகியோர்  நடித்துள்ளனர்.

இறுதியாக தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை என்ற தொடரின் கடைசி அத்தியாயத்தில், வாமிகா மற்றும் பிபி நடித்துள்ள இந்த அத்தியாயத்திற்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.  காதல் பற்றிய அழுத்தமான தொகுப்புடன், உங்கள் இதயத்துடன் உரையாட ‘’மாடர்ன் லவ் சென்னை' ஆறு கதைகளை கொண்ட ஒரு செலக்டிக் பூங்கொத்தை உங்களுக்கு பரிசளிக்க காத்திருக்கிறது. 

இத்தொடரின் டிரைலர் வெளியாகிய நிலையில், ஆறு இயக்குநர்களின் இயக்கிய படங்களின் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் எதிபார்ப்பை தூண்டியுள்ளது.

இதையும் படிக்க:   சென்னை மெட்ரோ திட்டத்தில் மாற்றம்... நீதிமன்றத்தில் வழக்கு!!