காணாமல் போன கார் சாவி...புகாரளித்த நடிகர் ரஜினியின் மகள்!!

காணாமல் போன கார் சாவி...புகாரளித்த நடிகர் ரஜினியின் மகள்!!

நடிகர்  ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் கார் சாவி காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் ராகவாவீரா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.  நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். 

கடந்த மாதம் 23ஆம் தேதி சௌந்தர்யா வேலை சம்பந்தமாக  அவரது வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை காரில் சென்றுள்ளார்.  பின்னர்  அவர் சென்ற ரேஞ்ச் ரோவர் காரின் மற்றொரு சாவியை தேடிய போது காணாமல் போயுள்ளது.  பல இடங்களில் சௌந்தர்யா கார் சாவியை தேடிய போதும் கிடைக்காததால் நேற்று அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கார் சாவியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சமீபத்தில் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது மகள் கார் சாவியை காணவில்லை என புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   பாஜக வெற்றி பெறவே இந்த சிறப்பு வ்ழிபாடு... நடிகை நமீதா!!