தனுஷால் நின்று போன நடிகையின் திருமணம்..! வெள்ளைப் பொண்ணின் மனசை மாற்றியதாக கிசு கிசு..!
தனுஷால் நின்று போன ஜிலேபி நடிகையின் திருமணம்..!
தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜிலேபி நடிகை மெஹ்ரீன் பிர்சடா. சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாடா. அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா, தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவருக்கும், முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தட புடலாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென திருமணம் இனி நடைபெறாது என தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார் மெஹ்ரீன் பிர்சடா. இதற்கும் தனுஷ் தான் காரணம் எனக் கிசு கிசுக்கப்படுகிறது. நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் ஏன் திருமணம் செய்துக் கொள்கிறாய்? என நடிகையின் மனதை தனுஷ் கலைத்ததாகவும், இதனால் நடிகை திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு ஏன்? சோனியா அகர்வால்-செல்வராகவன் பிரிவுக்கே தனுஷ் தான் காரணம் எனவும், இருவரின் பிரிவிற்கு பிறகு சோனியா அகர்வாலுக்கு தனுஷ் தனி வீடு ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது.. பதனி.. பதனி..