விஜய்டிவியை விட்டு விலகுகிறாரா மாகாபா ஆனந்த்... ஏன் தெரியுமா? இவர் இடத்தை பிடித்த பிரியங்கா!

விஜய்டிவியை விட்டு விலகுகிறாரா மாகாபா ஆனந்த்... ஏன் தெரியுமா? இவர் இடத்தை பிடித்த பிரியங்கா!

பிரபல தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக விளங்கும் மாகாபா ஆனந்த் அந்த டிவியை விட்டு விலகுவதால் அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் தொப்பாளினி பிரியங்கா தான். இவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகளில் Entertainment - க்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டு போவார்கள். இப்படிதான் அவர்கள் இருவரும் மக்களிடையே நல்ல பிரபலமானார்கள்.

சமீபத்தில் கூட பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பின்னர் மாகாபா பிரியங்காவின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் சேர்த்து தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து மாகாபா ஆனந்த் விலகி விட்டதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது. 

ஆனால் அந்த தகவல் வெறும் வதந்தி தான் என்று கூறுகின்றனர். உண்மையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல உள்ள காரணத்தால் தான் விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளாராம். இதனால் இவர் வரும் வரை மாகாபாவோட நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. மீண்டும் மாகாபா வந்த பிறகு தனது பணிகளை மேற்கொள்வார் என்பதே உண்மை என்று கூறுகின்றனர்.