“சுஷ்மிதாவை நான் தலை வணங்குகிறேன்”- தயாரிப்பாளர் மகேஷ் பட்:
“தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தது போல வாழ்கிறார் சுஷ்மிதா”- என தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
1994ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறார். ஐபிஎல் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான லலித் கே மோடியுடன், காதலில் விழுந்தார்.
சமீபத்தில், லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தார். இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட அந்த போட்டோக்கள், நெட்டிசன்களால் பகிரப்பட்டதோடு, பலரும் சுஷ்மிதா செனின் வாழ்க்கைக்காக மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சுஷ்மிதாவிற்கும், லலித்-க்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஆனால், ஒரு சிலர், சுஷ்மிதாவின் காதல் வாழ்க்கை சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட ஒரு உறவாகவே பார்த்து வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கூடவே சுஷ்மிதாவை பணத்தாசைப் பிடித்தவர் என்றும் அவதூறு பேச்சுகள் தொடர்ந்தன.
இதனைத் தொடர்ந்து ஒரு சில பிரபலங்கள் சுஷ்மிதா சென்-காக ஆதரவளித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட்டும் இணைந்துள்ளார்.
பத்திரிக்கையளர்களிடம் பேசிய மகேஷ் பட், சுஷ்மிதாவைப் பாராட்டித் தள்ளினார். அப்போது பேசிய அவர், “வித்தியாசமான பெண்தான் சுஷ்மிதா. அப்போதிலிருந்தே, சுஷ்மிதா, தனது முடிவுகளை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுப்பவள் அவள். அவ்வளவு தைரியம் அவளுக்கு. ஆனால், 21ம் நூற்றாண்டில், தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது கூட இன்று மக்களால் விமர்சிக்கப்படுவது மிகவும் அவலமான நிலை என்று நான் நினைக்கிறேன். அடுத்தவர்களின் கருத்துகளை அடுத்தவர்கள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், சுஷ்மிதாவுடனான, தனது விக்ரம் பட்டின் உறவு குறித்து பேசுகையில், மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மிக அழகான ஜோடி என்றும், அவர்களது காதல், செய்ச்சிலிசில் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 1994ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விக்ரம் பட்டுடன் டேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.