பெண்களுக்கு நடிகை ஜோதிகா அட்வைஸ்... வைரல் பதிவு

பொன்மகள் வந்தாள்’படத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

பெண்களுக்கு நடிகை ஜோதிகா அட்வைஸ்... வைரல் பதிவு

கடந்த 2020-ம் ஆண்டு ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘பொன்மகள் வந்தாள்’.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி உருவாகி இருந்த இப்படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு, 48 வயதுமிக்க உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அந்த உறவினர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. படத்தின் எதிரொலியாக இந்த சிறுமி தைரியமாக தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிகொண்டு வந்த செய்தியை பார்த்த பலரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை சமுக வலைதளத்தில் பாராட்டி வந்தனர்.

இந்த செய்தியை நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் “அந்த அமைதி நிலையை தகர்த்து எறியுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும்போது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து நிற்கிறாள்“ என்று அறிவுரை கூறியுள்ளார்.