இன்று யோகா தினம் மட்டுமல்ல... இன்னொரு சிறப்பும் இருக்கு!

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று யோகா தினம் மட்டுமல்ல... இன்னொரு சிறப்பும் இருக்கு!

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்றும் ஒரு பொருள் உண்டு. இசை என்பது சிறந்த கலைகளில் ஒன்று. மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். எனவே தான் உலகின் நிறைய இசைக்கலைஞர்கள் தங்களின் இசையால் மக்களை கட்டிபோட்டு வைத்திருகின்றனர்.   

இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. இசையால் பல நோய்களை குணமாக்க முடியும் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியடைந்த உலகத்தில், இசைக்கு அளவே இல்லை. இசையில்லாமல் நீண்ட தூரப் பயணத்தை யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது.