என்னது ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நாளை இல்லையா..? காரணம் என்ன..?

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரின் திருமணம் நாளை நடைபெறவிருந்த நிலையில், திடீரென்று திருமணத்தை ஒத்திவைத்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னது ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நாளை இல்லையா..? காரணம் என்ன..?

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆலியாவும், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சந்தின் மகனான ரன்பீர் கபூர் இருவரும், கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தில் இணைந்து நடிக்க துவங்கினர். அந்த படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்து வந்துள்ளது. ஆனால் தங்கள் காதலை வெளிப்படுத்தாது வந்த ஆலியா - ரன்பீர் ஜோடி, நடிகை சோனம் கபூரின் திருமணத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டு தங்களது காதலை உறுதிப்படுத்தி இருந்தனர். 

அதற்கு பிறகு ரசிகர்களிடையே இவர்களது திருமணம் குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் 14,15 ஆம் தேதிகளில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை ஆலியாவின் திருமணம் குறித்து அவரின் ஒன்றுவிட்ட சகோதரரான ராகுல் பட், ஆலியா- ரன்பீரின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு காரணமாக மீடியாக்களுக்கு ஆலியாவின் திருமணம் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரம் இந்தத் திருமணம் நடைபெறும் என்று கூறிய அவர் தேதி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஆலியா-ரன்பீர் திருமணத் தேதி குறித்து இயக்குநர் மகேஷ் பட் மற்றும் ரன்பீரின் அம்மா நீத்து சந்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பொதுவெளியில் திருமணத் தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் ரன்பீர்- ஆலியாவின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும், இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கருத்து வெளியாகி உள்ளது.

இந்த தகவல் ரன்பீர்- ஆலியாவின் திருமணத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.