சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைய போகிறார்களா?.. அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்!!

மீண்டும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒன்று சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைய போகிறார்களா?.. அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்!!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அதற்கு பிறகு நடிகை சமந்தாக்கும் , நாகசைதன்யாவுக்கும்  இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இவர்களின் விவாகரத்து விஷியம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பேச பட்டு வந்தது. இருந்தாலும் தற்போது வரை அது தொடர்பான பரபரப்பு குறையவில்லை.. இவர்கள் இருவருமே தங்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இருப்பினும் இவர்களது விவகாரத்துக்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவின. இதையெல்லாம் சட்டப்படி சந்தித்த சமந்தா, கணவரை பிரிந்த பிறகு ஓவராக கிளாமரை காட்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில், சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர போவதில்லையாம்.

சினிமாவில் தான் ஒன்று சேர போகிறார்களாம்.. பிரபல பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி, தனது புதிய படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தாவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராரம். அதிலும் சமந்தாவும், நந்தினி ரெட்டியும் ரொம்பவும் க்ளோசாம். இப்படம் பற்றியும் நாக சைதன்யா மற்றும் சமந்தா மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பது குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.