புஷ்பா டைரக்டருடன் இணைகிறாரா பிரபாஸ்?!!!

புஷ்பா டைரக்டருடன் இணைகிறாரா பிரபாஸ்?!!!

சூப்பர் ஸ்டார் பிரபாஸ் தனது வலுவான நடிப்பு மற்றும் அற்புதமான படங்களால் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார்.  இருப்பினும், 2022 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இல்லை. 2023ம் ஆண்டு அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் புஷ்பா புகழ் இயக்குனருடன் பிரபாஸ் 2023 இல் ஒரு படம் செய்ய இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இந்த செய்தி வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  செய்தி அறிக்கைகளின் படி, பான் இந்தியா திட்டத்திற்காக பிரபாஸ் புஷ்பா இயக்குனர் சுகுமாருடன் கைகோர்த்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

பிரபாஸ் மற்றும் சுகுமாரின் இந்த பெரிய பட்ஜெட் திட்டத்திற்கு அபிஷேக் அகர்வால் நிதியுதவி அளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மாருதியின் ராஜா டீலக்ஸ் படப்பிடிப்பிலும் பிரபாஸ் இந்த நாட்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.  இந்தப் படத்தில் பிரபாஸ் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளுடன் காதல் வயப்படுவதாக கதை அமைந்துள்ளது.  இப்படத்தில் ஒரு கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கும் அதே நேரத்தில், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.  சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான பிரபாஸின் புகைப்படம் வைரலானது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   புதினின் அரசியல் விமர்சகர் இந்தியாவில் மரணம்...விபத்தா? தற்கொலையா?