நெற்றியில் பொட்டுடன் இருக்கும் நயன்தாரா... திருமணம் முடிந்துவிட்டதா? ஷாக்கான ரசிகர்கள்!

நெற்றியில் பொட்டுடன் இருக்கும் நயன்தாரா... திருமணம் முடிந்துவிட்டதா? ஷாக்கான ரசிகர்கள்!

சமீப காலமாகவே காதல் ஜோடிகளாகவே வலம் வரும் நடிகை நயந்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் பூஜை செய்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரல் ஆகி வந்தது.

இதனை தொடர்ந்து மாலை நேரத்தில் அவர்கள் மிக எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் தகவலும் பரவி வந்தது.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பும் வகையில், கோவிலில் எடுக்கப்பட்ட அவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அமைந்திருந்தது.

அதில் திருமணம் ஆன பெண்கள் போல நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தையே சூடேற்றி வருகிறது. அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் உண்மையிலேயே நயந்தாராவுக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று ஷாக் ஆகி இருக்கின்றனர்.