சினிமாவுக்கு வந்த புதிதில் அந்த மாதிரி சில தப்பு செஞ்சிருக்கேன்... அந்த ர(ங்)கசியங்களை சொன்ன பிரபல நடிகை...!!

சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என நடிகை பூர்ணா மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் அந்த மாதிரி சில தப்பு செஞ்சிருக்கேன்...  அந்த ர(ங்)கசியங்களை சொன்ன பிரபல நடிகை...!!

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கச்சிதமாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை பூர்விகமாக கொண்டவர் இவர். மலையாள மொழி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.



சமீபத்தில் இவர் கேரளாவில் திருமண மோசடி கும்பலில் சிக்கி மீண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை பூர்ணா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அதில்.



பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். 

எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன். 

சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்றார்.