“என்னை நானே உருவாக்கிக் கொண்டேன்!”- பணத்தாசை பிடித்தவர் என்ற விமர்சனங்களுக்கு சுஷ்மிதா பதிலடி!
பணத்துக்காக தான் அவருடன் வயது வித்தியாசமின்றி காதலித்து வ்ருவதாக வந்த விமர்சனங்களுக்கு, தனது சோசியல் மீடிடாக்களில் பதிலடி கொடுத்துள்ளார் சுஷ்மிதா சென்!
லலித் மோடியை காதலிப்பதாக சுஷ்மிதா சென் குறித்த தகவல் வெளியானதை அடுத்து, அவரை கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐபிஎல்-இன் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, சமீபத்தில் தனது காதலி என, முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தார். இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட அந்த போட்டோக்கள், நெட்டிசன்களால் பகிரப்பட்டதோடு, பலரும் சுஷ்மிதா செனின் வாழ்க்கைக்காக மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சுஷ்மிதாவிற்கும், லலித்-க்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
என்னதான் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், மறுபக்கம், எதிர்ப்புகளும் கேளிகளும், கிண்டல்களும் குவிந்துக் கொண்டுதான் இருந்தன.
இந்த நிலையில், வயது வித்தியாசமின்றி, காதல் என்ற பெயரில், அவரது பணத்திற்காக மட்டுமே அலைந்து சுஷ்மிதா லலித் உடன் இணிஅந்திருப்பதாக மோசமாக ஒரு சில நெட்டிசன்கள் கேலி செய்ததில், பரபரப்பு நிலவியது. பல வருடங்களாக , காதல் திருமணம் என எது பற்றியும் நினைக்காமல் இருந்த சுஷ்மிதா, மீண்டும் காதல் வயப்பட்ட நிலையில், இது போன்ற அவதூறு பேச்சுகள், அவருக்கு வருத்தமளித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, பணத்துக்காக மட்டுமே அவருடன் இருப்பதாக வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுஷ்மிதா. தனது பேச்சுத்திறனுக்காக பேர் போன சுஷ்மிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு தங்கம் அதிகமாக பிடிக்காது. அனைவருக்கும் தெரியும் எனக்கு பிடித்தது வைரம் தான் என்று! அதையும் என் சொந்த உழைப்பில் வாங்கி மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை பணத்தாசை பிடித்தவள் எனக் கூறுபவர்களுக்கு எனது பதில் இது தான்!” என்று எதார்த்தமாக தான் எப்படிப் பட்டவர் எனத் தெளிவாகக் கூறினார்.
சுமார் 10 மில்லியன் நெட் வர்த் கொண்ட 1996ம் ஆண்டின் மிஸ் யூனிவெர்ஸ் சுஷ்மிதா செந்னை விட சிறிது பணக்காரராக இருக்கும் லலித் மோடி, வயதில் முதியவர் என்ற காரணத்தாலும், உலகின் அழகு அதிகாரத்திற்கேற்றாற்போல் இல்லாடஹ் காரணத்தாலும்., தொடர்ந்து இருவரது காதல் வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் பறந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டுக் கொன்ள்ளாமல், சுஷ் மற்றும் லலித் மகிழ்ச்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது!
View this post on Instagram