இசைக்கும் வரியா.... ஜி.வி.க்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி ஆணையர்!!!

இசைக்கும் வரியா.... ஜி.வி.க்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி ஆணையர்!!!

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி. வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு  நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி  ஜி. வி.பிரகாஷ் குமாருக்கு உத்தர விட்டிருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து ஜி. வி.பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார்.  அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு, நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிக்க:  ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள்..... உயர்நீதிமன்றம் உத்தரவு!!!