55 அடி உயர அஜித் கட் அவுட்...ஆபத்தை உணராத ரசிகர்கள்...பாலாபிஷேகம் செய்து ஆரவாரம்...!

55 அடி உயர அஜித் கட் அவுட்...ஆபத்தை உணராத ரசிகர்கள்...பாலாபிஷேகம் செய்து ஆரவாரம்...!

புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள 55 அடி உயர அஜித் கட்டவுட்டில், ஆபத்தை உணராத அஜித் ரசிகர்கள் ஏறி நின்று பாலாபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர்.

இளைஞர்களின் கொண்டாட்டம்:

பொதுவாகவே, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என்றால் காலம் காலமாக புதுப்படங்களின் வரவு தான் இளைஞர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் குறிப்பாக அஜித், விஜய் படங்கள் என்றால் அவர்களின் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம். 

துணிவு - வாரிசு:

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அஜித் படமும், விஜய் படமும் ஒரே நேரத்தில் மோதுகிறது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: பாரம்பரிய உடையில் சமத்துவ பொங்கல்...கோலகலமாக கொண்டாடிய மாணவ, மாணவிகள்!

விஜய் - அஜித் பேனர்கள்:

இந்நிலையில் புதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகவுள்ள நிலையில், புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான இடங்களில் அஜித் - விஜய் ரசிகர்கள் அவர்களின் பட பேனர்களை வைத்து வருகின்றனர்.

பாலாபிஷேகம்:

இதனிடையே அஜித் ரசிகர்கள் சுதேசி மில் அருகே வைத்துள்ள 55 அடி உயர கட்டவுட்டில் ஆபத்தை உணராமல் ஆர்வமிகுதியால் அதன் உச்சிக்கு ஏறி பால் ஊற்றி அபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர்.