ஓகே சொல்வாரா அப்பா... ஏக்கத்தில் துல்கர் சல்மான்... எதற்காக தெரியுமா?

ஓகே சொல்வாரா அப்பா... ஏக்கத்தில் துல்கர் சல்மான்... எதற்காக தெரியுமா?

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்  நடிகர் துல்கர்சல்மான். என்னதான் நடிகர் மம்முட்டியின் மகனாக இருந்தாலும் இவர் தன்னுடைய திறமையால் மட்டுமே தொடர்ந்து நடிகராக நீடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் தற்போது ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்து வருகிறார்.

தமிழில் வாயை மூடி பேசவும் படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற ஹிட் படங்களை வரிசையாக கொடுத்து வந்தார். இந்த படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் , குறிப்பாக ரசிகைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக தமிழில் இவர் நடிப்பில்  உருவாகியுள்ள ’ஹே சினாமிகா’ படம் வருகின்ற மார்ச் 3-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு  ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குரூப் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத்தந்துள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் பயோ பிக் படங்களில் நடிப்பது தனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று என்றும், குரூப் கதையில் நடிக்க தனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் பேசியதாகவும் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே தொடர்ந்து பேசிய அவர், தான் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடிக்க விருப்புவதாகவும், ஆனால் அதற்கு அப்பா மம்முட்டி ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாங்கள் இருவரும் தனித்தனியாக தங்களது கேரியரை தொடர்வதே சிறப்பானது என்றும் பேட்டியில்  கூறியுள்ளார்.