வருமான வரிக்கு வட்டி செலுத்திவதில் இருந்து விலக்கு கோரிய சூர்யாவின் மனு தள்ளுபடி.!!!

வருமான வரிக்கு வட்டி செலுத்திவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருமான வரிக்கு வட்டி செலுத்திவதில் இருந்து விலக்கு கோரிய சூர்யாவின் மனு தள்ளுபடி.!!!

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010 -ம் ஆண்டு நடந்த வருமான வரிசோதனையில், 2007 முதல் 2008 -ம் ஆண்டு மற்றும் 2008 முதல் 2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 -ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும்  மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007 முதல் 2009 -ம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப் பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018- ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை எனக்கூறி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.