சொந்த ஊரில் சாதிக்கலவரம்..! பொங்கி எழுந்து இயக்குனர் சேரன் போட்ட பரபரப்பு ட்வீட்..!!

இயக்குனர் சேரன் தனது சொந்த ஊரில் நடந்த சாதி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சொந்த ஊரில் சாதிக்கலவரம்..! பொங்கி எழுந்து இயக்குனர் சேரன் போட்ட பரபரப்பு ட்வீட்..!!

தனது திறமையால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, போன்ற திரைப்படங்கள் இவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. 

சேரன் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆன நிலையில், அவருக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்த வரிசையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக் கலவரத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

சேரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர் பட்டி கிராமத்தில் பொங்கலன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சாதி கலவரமாக மாறவே, அப்பாவி மக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு இயக்குனர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது.. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள்.. அந்த ஒற்றுமையை சிதைவதை பெரியவர்கள் தடுக்கவேண்டும்

அச்சமடைந்த மக்கள் அவர்களை போலீசில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.. தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள்.. இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள்..  

எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும்.. தவறுகள் கலையப்பட்டு, உணர்த்தப்பட்டு.  நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும்..  சிறுவர்களை இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.