விஜய் படக்குழு மேல் புகார்... பத்திரிக்கையாளர் மேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு...

விஜய் படப்பிடிப்பு தளத்தில் எழுந்த ஒரு புகாரைப் பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் படக்குழு மேல் புகார்... பத்திரிக்கையாளர் மேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு...

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ வி பி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்திற்காக பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இங்கு ஆயிரம் மாடுகள் மற்றும் யானைகளை வைத்து உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துவதாக வந்த தகவலையடுத்து சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் செய்தியாளர்கள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் படபிடிப்பு தளத்தில் இருந்து வந்த ஊழியர்கள் செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன் வைத்திருந்த கேமரா ஆகியவற்றை பறித்து கொண்டு அவர்களை மிரட்டும் தோணியில் பேசி அவர்களை காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஹீரோ ஆன அப்புறமும் இப்டி ஒரு ரோல்...இப்பவே ரிகர்சல் ஸ்டார்ட்...

இந்த காட்சிகள் அந்த தொலைக்காட்சியில் வெளியானது இதையடுத்து சம்பவ இடத்திற்கு நசரத்பேட்டை போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் படப்பிடிப்பு குழுவினர் பறித்து வைத்திருந்த கேமரா, டிரோன் ஆகியவற்றை மீட்டு செய்தியாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தங்களை தாக்கியதாக செய்தியாளர்கள் புகார் அளித்தனர். மேலும் தங்களது அனுமதியின்றி படப்பிடிப்பு தளத்திற்குள் டிரோன் கேமராவை பறக்க விட்டு படம் பிடித்ததாக படப்பிடிப்பு குழுவினரும் புகார் அளித்தனர். இரண்டு தரப்பினரும் அளித்த  புகாரியில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய நடிகர் விஜய்...அபராதம் விதித்த போலீசார்!!!