ராகவா லாரன்ஸ் வரிசையில் இணைந்த அர்ஜூன்!! போரூர் அருகே கட்டி வரும் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில்!!

அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் பணிகள் நிறைவு..!

ராகவா லாரன்ஸ் வரிசையில் இணைந்த அர்ஜூன்!! போரூர் அருகே கட்டி வரும் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில்!!

நடிகர் அர்ஜூன் கட்டி வரும் ஆஞ்சநேயர் கோயிலின் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திரைப் பிரபலங்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் நடிகர் ராகவா லாரன்ஸ் ராகவேந்திரரிர் மீதான பக்தியால், ராகவேந்திர கோயில் ஒன்றை கட்டியதன் மூலம் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்கவராக உயர்ந்தார். 

அந்த வரிசையில், ஆக்சன்கிங் அர்ஜூன் சென்னை போரூர் அருகே பிரம்மாண்டமாக ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டத்தொடங்கினார். போரூர் அருகே தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கட்டத் துவங்கப்பட்டது இந்த ஆஞ்சநேயர் கோயில். 

கர்நாடக மாநிலம் கொய்ரா என்னும் ஊரில் இருந்து 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் மற்றும் 17 அடி அகலத்தில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையானது, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. 

விசேஷ பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் கோயில் பணிகள் முடிவடைந்துள்ள தருணத்தில், விரைவில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.