கமலுடன் நடிக்க மறுத்த 3 நடிகைகள்..! நதியாவை வ(லை)ளைத்த படக்குழு?
கமல் பெயரை கேட்டு தெறித்து ஓடிய 90’ஸ் நடிகைகள்..!

ரோகிணி திரையரங்க சம்பவம் வருத்தமளிப்பதாக நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ”பத்து தல” படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்றைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக திரைப்படம் வெளியானது. படத்தை பார்ப்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், ‘பத்து தல’ படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்கிற்கு குழந்தையுடன் சென்ற நரிகுறவ பெண் ஒருவர், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த பெண் கையில் டிக்கெட் வைத்திருப்பதாக கூறிய பின்னரும் அவர்கள் அனுமதிக்கப்படாதது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திரைபிரபலங்கள் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றி மாறன், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளதுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூரியும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விடுதலை திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சூரி, முன்னதாக ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது திரையரங்குகள் எனவும், இச்சம்பவம் எந்த சூழலில் நடந்தது என்பது தெரியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.
சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவறவர்கள் அனுமதிக்கப்படாத விவகாரத்திற்கு நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் வெற்றிமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ”பத்து தல” படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்றைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக திரைப்படம் வெளியானது. படத்தை பார்ப்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், ‘பத்து தல’ படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரையரங்கிற்கு குழந்தையுடன் சென்ற நரிகுறவ பெண் ஒருவர், திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த பெண் கையில் டிக்கெட் வைத்திருப்பதாக கூறிய பின்னரும் அவர்கள் அனுமதிக்கப்படாதது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த வகையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, 100 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமையை உடைத்தெறிந்த திரையரங்கம், இன்று உழைக்கும் எளிய மக்களிடம் தீண்டாமையை கடைபிடிப்பது ஆபத்தான போக்கு என இயக்குனர் வெற்றிமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோகிணி தியேட்டரில் பட்டியலினத்தவரை அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை சரத் குமார் கூறியுள்ளார்.
சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் நடைபெற்ற 130 வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அழைக்கப்பட்டார். இதில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை வந்தடைந்த சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க | துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....
அப்போது அடுத்த மாதம் திரையரங்குளில் வெளியாக உள்ள பொன்னியன் செல்வன் பாகம் - 2 திரைப்படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போலவே தானும் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர் ஒருவர் ரோகிணி தியேட்டர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, இதுபோன்ற செயல்கள் அவருக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். நடிகர் சரத் குமார் 2015ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சென்னையில் பிரபல திரையரங்கில் திடீர் ஐ.டி சோதனை...!
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்விகள் கேட்டதற்கு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என சொல்வது எதிர்கட்சியினரின் தொடர்செயல்பாடாக இருந்து வருகிறது எனவும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்பது அரசுக்கு தெரியும் எனவும் கூறிய சரத்குமார் தற்போது தமிழகத்தை பொறுத்தவரை காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் ஆன்லைன் ரம்மி மற்றும் அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சனை குறித்து கேட்டதற்கு அதிமுக பிரச்சனை என்பது உள்கட்சி பிரச்சனையாக இருந்து வருகிறது எனவும் ஆன்லைன் ரம்மி என்பது நிச்சயமாக தடைசெய்ய வேண்டும் எனவும் கூறினார்.
- முருகானந்தம்
மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகி வரும் இரு பெண் அரசு அதிகாரிகளின் வார்த்தை வாதம்!!!
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட அஜய் தேவ்கனின் 'மைதான்' படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இன்றைய தேதி வரை, நடிகர் அஜய் தேவ்கனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'மைதான்' இருந்து வருகிறது. உலக அளவில் பலராலும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரலாற்றையும், சாதனைகளையும் இந்தியாவுக்குக் கொடுத்த ஒரு அறியப்படாத கதாநாயகனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் 'மை டியர் டயானா' .....!!