சென்னை திரும்பிய நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு 

அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு 

சன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினி‘அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் ரஜினி ஆண்டுக்கு ஒருமுறை தனது உடலை அமெரிக்கா சென்று பரிசோதனை எடுத்து பரிசோதித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது . கொரோனா காரணமாக ரஜினியின் அமெரிக்க பயணம் தாமதமான நிலையில் கடந்த 19ஆம் தேதி ரஜினி அமெரிக்காவுக்கு சென்றார்.

இந்த சூழலில் அமெரிக்காவில் நடிகை தனுஷ் நடித்து வரும் 'தி கிரே மேன்' படப்பிடிப்பு சென்று கொண்டிருப்பதால் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனுஷ் அமெரிக்காவில் முகாமிட்டிருந்தார். இதனால் நடிகர் ரஜினியை அவரது மகள் ஐஸ்வர்யா கவனித்து கொண்டார். கடந்த 6-ம் தேதி மயோ கிளினிக் மருத்துவமனையில் இறுதி பரிசோதனை செய்து கொண்ட ரஜினிகாந்த், மீண்டும் சென்னை புறப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது’ என்று தெரிவித்தார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.