நடிகர்களின் புதிய கெட்டப்...இணையத்தில் வைரலாகும் AI பார்பி புகைப்படங்கள்...!

நடிகர்களின் புதிய கெட்டப்...இணையத்தில் வைரலாகும்  AI பார்பி புகைப்படங்கள்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் AI பார்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) ஆரம்ப கால கட்டம் பேசுமளவில் இல்லையென்றாலும், சிறு சிறு வேளைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால், அதன் பயன்பாடு என்பது கற்பனைக்கு எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

நாளைடைவில், உலக மக்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில், செயற்கை நுண்ணறிவுடன் ஒத்து வாழத் தொடங்கிவிடுவார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது. OpenAI மற்றும் ChatGPT போன்ற புதுவரவுகளே, செயற்கை நுண்ணறிவின் ஒரு புதிய சகாப்தத்திற்கு தொடக்கப்புள்ளி என்றும் கூறலாம். இதன்மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளை ஈசியாக பூர்த்தி செய்து வருகின்றனர். 

இதையும் படிக்க : ஹேக்கிங் மற்றும் இணைய குற்றங்களில் AI பயன்படுத்தப்படுகிறதா?

அத்துடன் ஏஐ மூலம் நம்மளுடைய சாதாரண புகைப்படத்தை கூட எப்படி வேண்டும், எந்த இடத்தில் வேண்டும் என்ற Text கமெண்ட் மூலம் மாற்றி கொள்ளலாம். அந்த வகையில், சமீபகாலமாக ஏஐ மூலம் நிறைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் பார்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. AI மூலம் உருவாக்கப்பட்ட நடிகர்களின் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு உணமையான பார்பி புகைப்படங்கள் போன்றே காட்சியளிக்கிறது. இதனைக் கண்ட நடிகர்களின் ரசிகர்கள், இந்த பார்பி புகைப்படங்களை டிரெண்ட் பண்ணி வருகின்றனர்.