மாப்பிள்ளை கிடைக்காமல் பிரபல நடிகை புலம்பல்.! காரணம் என்ன தெரியுமா?

வதந்தியால் தான் தனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என பிரபல நடிகை ஒருவர் புலம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாப்பிள்ளை கிடைக்காமல் பிரபல நடிகை புலம்பல்.! காரணம் என்ன தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும், சர்ச்சைக்கு பேர் போனவரும் தான் நடிகை கங்கனா ரணாவத். சமூக வலைதளங்களில் அவ்வப்போது காரசார பதிவுகளை வெளியிட்டு அனைவராலும் பேசப்படுபவர். தமிழில் ‘தலைவி’ திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத் வதந்தியால் தான் தனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், ’என்னை பலரும் டாம்பாய் கேர்ள் என்று கூறுகின்றனர் என்றும், தவறு செய்யும் ஆண்களை துணிச்சலுடன் தட்டிக் கேட்பவர் என்று பலரும் நினைக்கின்றனர் என்றும், ஆனால் என் வாழ்க்கையில் நான் இதுவரை யாரையும் அடித்தது கூட இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

என்னைப்பற்றி இது மாதிரி வதந்தி பரப்பப்படுவதால் தான் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை கூட கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாவில் தன் கருத்துக்களை மிக ஆவேசமாக தெரிவித்து வரும் கங்கனா ரணாவத், என்னதான் சர்ச்சைக்குரியவராக பார்க்கப்பட்டாலும் தற்போது அவர் எனது திருமணத்திற்கு மாப்பிள்ளை கூட கிடைக்கவில்லை என்று கூறி புலம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.