'அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம்'  விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்...!

'அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம்'  விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்...!

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை இறுதி (18.05.2023) நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள  தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேருவதற்கு 2023-24ம் கல்வியாண்டில் 1, 32, 872 விண்ணப்பங்கள் வந்துள்ளன எனவும், ஒரு மாணவருக்கு பல முறை விண்ணப்பம் செய்தததின் அடிப்படையில் 2, 99, 688 பேர் பதிவு செய்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8000 தனியார் பள்ளிகளில் 83, 378 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பிலும் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். 

ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே மாதம் 23ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.  தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ஆம் தேதி அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே மாதம் 29ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் மே 17 ந் தேதி வரையில் 2023-24 ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு 2, 99, 668 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு நபர் சில முறை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க:டிஸ்னி ஹாட்ஸ்டாரின் "கேரளா க்ரைம் ஃபைல்ஸ்" டீசர் வெளியீடு...!!