சுருக்கெழுத்தாளர் தேர்வில் குளறுபடி...! தலைமை செயலகம் முற்றுகை...!!

சுருக்கெழுத்தாளர் தேர்வில் குளறுபடி...! தலைமை செயலகம் முற்றுகை...!!

புதுச்சேரியில் சுருக்கெழுத்தாளர் பணிக்காக நடைபெற்ற தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால், மறு தேர்வு நடத்தக்கோரி தேர்வர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் கிரேடு 2 பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நீண்ட நாட்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று சுருக்கெழுத்தாளர் பணிக்கான தேர்வு காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 3 ஷிப்டாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற சுருக்கெழுத்தாளர் தேர்வில் தேர்வு கண்காணிப்பாளர்கள் தவறான வழிகாட்டுதல் கூறியதாக கூறி தேர்வு எழுதியவர்கள் தேர்வு மையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்வு மையத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வகள், மறு தேர்வு நடத்த வலியுறுத்தியும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல், மறு தேர்வு நடத்தும் வரை போராடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும்  படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?