சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது தீப்பற்றியதால் பரபரப்பு...

காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது தீப்பற்றியதால் பரபரப்பு...

காஞ்சிபுரம் | மின்நகர் 2வது தெரு பகுதியில் தனது தாயார் ரேவதியுடன் வசித்து வருபவர் உணவகம் மேலாண்மை பட்டதாரி பெண் தீபிகா.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவருடன் திருமணம் ஆகி சில மாதங்களில் கணவருடன் விவாகரத்து ஆகிய நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பட்டு ஜவுளி நிறுவனத்தில் தீபிகா பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரது தாயார் கோயிலுக்கு சென்ற நிலையில் சமையல் அறையில் தீபிகா பணிகளை மேற்கொள்ள முயற்சித்த போது திடீரென கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பாதாள சாக்கடையால் அவதியுறும் பொதுமக்கள்... நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி!!

மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக 108 அவசர ஊர்தி அழைக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சமையலறையில் இருந்த தீபிகாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். 80% சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள தீபிகாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தினை காஞ்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாந்தாராம் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஹர்னிஷா, பிரியதர்ஷினி, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தீவிபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்...!!