நான் எஸ்.பி.. 8,500 அனுப்பினா போதும்...- போலி ஐடி உருவாக்கி பண மோசடி...

எஸ்.பி போல போலி கணக்கு மூலம் பணம் கேட்ட கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் எஸ்.பி.. 8,500 அனுப்பினா போதும்...- போலி ஐடி உருவாக்கி பண மோசடி...

திருவள்ளூர் | மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சிபாஸ் கல்யான் அவரின் புகைப்படம் வைத்து திருவள்ளூர் ஐபிஎஸ் நண்பர் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு  உருவாக்கி அதன் மூலம் பலரிடம் பணம் கேட்டு மோசடி நடந்து வருவதாக அவருக்கு தகவல் சென்றுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது   உருவப் புகைப்படம் வைத்து பணம் கேட்டு மிரட்டும் யாரையும்  நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கையாக அத்தகைய நபர்களிடம் இருக்குமாறு அவர் தனது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபலமான நபர்களின் உருவப்படங்கள் வைத்து பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டா போன்ற கணக்கு மூலம் மோசடிகள் அரங்கேற்றது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகைப்படம் வைத்து  போலியான இன்ஸ்டா  ஐடி உருவாக்கி பணம் மோசடி நடத்தப்பட்டுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தை விட எங்களுக்கு பாதுகாப்பான அன்பான மாநிலம் எதுவுமில்லை - வட மாநில தொழிலாளர்