மீன்பிடி வலையில் சிக்கிய பெருமாள் சிலை!

மீன்பிடி வலையில் சிக்கிய பெருமாள் சிலை!

புதுச்சேரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய பழமை வாய்ந்த பெருமாள் சிலையின் தலைப்பகுதியை மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி சின்ன காலாபட்டு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனக்கு சொந்தமான படகில் தனது மகன்களான ராபின் மற்றும் ராபர்ட் உடன் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் தனது மகன்களுடன் படகில் கடலுக்கு சென்று  மீன் பிடிப்பதற்காக வலை விரித்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்து வலையை கடலுக்குல் இருந்து இழுத்த போது வலையில் ஒரு பழமையான பெருமாள் சிலையின் தலைப்பகுதி சிக்கி இருப்பதை கண்டனர். அதனை எடுத்துக்கொண்டு கரை வந்த மீனவர்கள் இது தொடர்பாக ஊர் மக்களிடம் தெரிவிக்க, அவர்கள் காலாபட்டு காவல் நிலையத்திற்கு அளித்தனர். தகவலின் பேரில் சின்ன காலாபட்டு கடற்கரைக்கு வந்த போலீசார் மீனவர் ராமச்சந்திரனிடம் இருந்து வலையில் சிக்கிய பெருமாள் சிலையின் தலை பகுதியை எடுத்து சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க:"திமுக ஆட்சி விரைவில் கவிழும்" எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்!