உயிரைக் கொடுத்து குஞ்சுகளை காப்பாற்றிய கோழி...

வீட்டிற்குள் புகுந்து கோழி மற்றும் வாத்தை கொன்ற கருநாகம்.குஞ்சுகளை அனைத்து காப்பாற்றி தாய்க்கோழி உயிரைவிட்டது.

உயிரைக் கொடுத்து குஞ்சுகளை காப்பாற்றிய கோழி...

மயிலாடுதுறை | சீர்காழியை அடுத்த புத்தூர் மடப்புரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகுந்த 5 நீளமுள்ள கருநாகப்பாம்பு அங்கிருந்த கோழிக்கூடையில் புகுந்துள்ளது. இதனையடுத்து கூடையில் இருந்த கோழி தனது குஞ்சுகளை சிறகுகளில் அனைத்து பாதுகாத்து பாம்புடன் சன்டையிட்டுள்ளது.

இதில் கருநாகம் கடித்ததில் தாய்கோழி பரிதாபமாக உயிரிழந்தது. சப்தம் கேட்டு வந்த பிரேமா குடும்பத்தினர் பாம்பை விரட்டிவிட்டு கோழிகுஞ்சுகளை மீட்டனர். பின்னர் சற்று நேரத்தில் மீண்டும் வீட்டுக்குள் புகுந்த கருநாகம் அங்கிருந்த வாத்தை கடித்து கொன்றது.

இதனையடுத்து பாம்பு பிடி விரரான தினேஷ்க்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தினேஷ் விட்டினுள் பதுங்கியிருந்த கருநாகப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

மேலும் படிக்க | எலியை விழுங்க முடியாமல் தவித்த பாம்பை மீட்ட இளைஞர்...