அரசியல் கட்சியினரை மிஞ்சிய விஜய், அஜித் ரசிகர்கள்...

அரசியல் கட்சியினரை மிஞ்சிய விஜய், அஜித் ரசிகர்கள்...

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் திருத்தணி கோல்டன் திரையரங்கத்தில் வருகின்ற 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு  அஜித் துணிவு திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாக உள்ளது. அதேபோல் அதிகாலை 4 மணிக்கு விஜயின் வாரிசு திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாக உள்ளது.

இதனால் கோல்டன் திரையரங்கம் வெளிப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சுவற்றில் பெயிண்டால் எழுதியும் காகிதத்தில் எழுதிய வைத்து முன்னதாகவே பிளக்ஸ் பேனர் வைக்க இடம் பிடிக்கின்றனர். சில ரசிகர்கள் இடம் பிடித்த இடத்தில் பேனர்களை வைக்க தொடங்கியுள்ளதால் திரையரங்கு வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் தங்களது விளம்பரத்திற்காக சுவர்களில் பெயர் எழுதி வைத்து தங்கள் கட்சித் தலைவர்களின் பெயர்களை எழுதி வைப்பது போன்று நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்கில் போட்டி போட்டுக் கொண்டு பேனர் வைக்க இடம் பிடித்து வரும் நிகழ்வு திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்