முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றவே... போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றவே... போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு புத்தகங்களை வாங்க வேண்டும் எனவும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

புத்தக திருவிழா:

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் 7-வது ஆண்டு புத்தகத்திருவிழாவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.  அப்போது இவர்தான் கலைஞர், ஈரோடும் காஞ்சியும், கலைஞரின் ஒரு மனிதன் ஒரு இயக்கம், தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன் எதற்கு,, திராவிட இயக்கத்தின் தலைவர் சி.நடேசனார், திராவிட தளபதி ஏ.டி.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 15 நூல்களை வாங்கினார்.

முதலமைச்சர் உத்தரவு:

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது எனவும் புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் எனவும் கூறிய அவர் இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள நூலகங்களை புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன எனவும் கூறினார். 

புத்தக வாசிப்பு:

தொடர்ந்து பேசிய அவர் அனைவரும் படிக்க வேண்டும் எனவும் அதற்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக புத்தகங்களை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.  எனவே மாவட்ட மக்கள் பெருமளவு திரண்டு வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.....மா. சுப்பிரமணியன் தகவல்!!