தென்காசி : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆட்சியர்...!

தென்காசி : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆட்சியர்...!

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கடந்த மாதம் 26ம் தேதி அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கக் கோரி கடையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்து என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு வழங்கினார். 

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தனது விருப்புரிமை நிதியிலிருந்து மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை  மாற்றுத் திறனாளி முத்துவிற்கு வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், கடையம் யூனியன் கவுன்சிலர் குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.