இலங்கை கடற்படையினரால் 3 மீனவர்கள் கைது...!

இலங்கை கடற்படையினரால் 3 மீனவர்கள் கைது...!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. 

கோட்டைப்பட்டிணத்தில் இருந்து நேற்று 97 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அருள், ஐயப்பன், சுந்தரம் ஆகியோர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கோரி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். 

தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் கைது செய்த மீனவர்களை மத்திய, மாநில அரசுகள்  விசைபடகு மற்றும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகதிற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.