தரமற்ற நிலக்கடலை விதைகள் விற்பனை...! விவசாயிகள் வேதனை....!

தரமற்ற நிலக்கடலை விதைகள் விற்பனை...! விவசாயிகள் வேதனை....!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியான காவிரி பாசன நீர் எட்டாத விளைநிலங்களில் மானாவாரி பயிரான கடலை, எள், உளுந்து, பாசிப்பயிர், கம்பு ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக திருவோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், வடசேரி உள்ளிட்ட ஊர்களில்  விளைநிலங்களில் கடலையை அதிகமாக விவசாயம் செய்து வருகின்றனர். மானாவாரி பயிரான நிலக்கடலை விதைக்கும் பணி தற்போது மும்முறமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் 35 கிலோ கொண்ட நிலக்கடலை விதைகள் ரூ.4500 முதல் 4800 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் தரமற்ற விதைகளாக உள்ளன. எனவே, தமிழக அரசே தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும், தரமற்ற விதைப்பொருகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கடலை விதைகள் முளைப்புத்திறன் இல்லாமல் உள்ளது, விளைநிலங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பலன் அளிக்காமல் உள்ளது என விவசாயிகள் வேதனைடன் தெரிவிக்கின்றனர். வேளாண்துறை நிலக்கடலை கொள்முதல் செய்து தரமான கடலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இதையும் படிக்க : ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த மாணவர்கள்..