போலீசாரின் அதிரடி தனிப்படை ...மாயமான மாணவர்கள் பெற்றோரிடம் சேர்ப்பு ..

போலீசாரின் அதிரடி தனிப்படை ...மாயமான மாணவர்கள் பெற்றோரிடம் சேர்ப்பு ..

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டு சாத்தான்குளம் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

மாயமான கல்லூரி மாணவர்கள் :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1400 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிக்கும் கார்த்திகா மற்றும் ஹெப்சிபா செல்வகுமாரி ஆகிய இருவரும் தோழிகள் என கூறப்படுகிறது.

போலீஸில் புகார் :

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி மதியம் பண்டாரபுரத்தை சேர்ந்த அச்சுதன் என்பவரது மகள் கார்த்திகா மற்றும் தட்டார்மடம் அருகே உள்ள கொழுந்தட்டு பகுதியை சேர்ந்த ராபர்ட் செல்வன் என்பவரது மகள் ஹெப்சிபா செல்வகுமாரி ஆகிய இருவரும் கார்த்திகாவின் வீட்டிலிருந்து வங்கிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளனர்.தனது ஊருக்கு அருகில் உள்ள முன்னாள் கல்லூரி தோழி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இறங்கியுள்ளனர்.பின்னர் நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறி கார்த்திகாவின் தந்தை அச்சுதன் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் சரிவர விசாரிக்கவில்லை என குற்றம் :

சாத்தான்குளம் காவல்துறையினர் அவர்களது செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது அதை சுவிட்ச் ஆப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.கல்லூரி மாணவிகள் இருவர் மாயமானது சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தங்களது மகள் எங்கே சென்றாள்? எப்படி இருக்கிறாள்? அவர்களுக்கு என்ன ஆனது என்று மாணவிகளின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.மாயமான கல்லூரி மாணவிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து சாத்தான்குளம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரும் மயமாகி ஒரு வாரம் ஆன நிலையில் போலீசார் சரிவர விசாரிக்காமல் காலதாமதம் செய்கின்றனர் .எனவே தற்போது டி ஐ ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். கல்லூரி மாணவிகள் இருவரும் ஒரே நேரத்தில் மாயமான நிலையில் அது தொடர்பான வழக்கை போலீசார் இழுத்தடிப்பதாக கூறி பெற்றோர்கள் டி ஐ ஜியிடம் முறையிட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரிடம் சேர்ந்த மாணவர்கள் :

இந்நிலையில் காணாமல் போன கல்லூரி மாணவர்களை தனிப்படை வைத்து இருவரையும் கண்டுபிடித்து விட்டனர்.சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன்,பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் பெண் காவலர் சித்ரா கல்லூரி மாணவிகள் இருவரையும் விசாரணை செய்து அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை 27ஆம் தேதி தலைமை காவலர் மரியராஜா அல்போன்ஸ், பெண் காவலர் சர்மிளா 30ஆம் தேதி தலைமை காவலர் ஐயப்பன்,பெண் காவலர் சித்ரா தலைமையில் கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.