ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டிய அதிகாரிகள்...

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டிய அதிகாரிகள்...

கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த காட்டுயானைகள் அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் தளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் அருகில் உள்ள தேவகானப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்கிருந்த தைல மர தோட்டத்திற்குள் அருந்து முகாமிட்டது.

மேலும் படிக்க | தீா்த்தக்குடம் ஊா்வலம்... திரளானோர் பங்கேற்பு...

இதுகுறித்து அறிந்த தளி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டினர்.

தேவகானப்பள்ளியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கிராமப்பகுதிகள் வழியாக தளி வனப்பகுதிக்கு 5 காட்டு யானைகளும் விரட்டி அடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் படிக்க | மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?!!